விஸ்பரூபம் படத்தில் தீபகா படுகோனை நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என கமல்ஹாஸன் கூறினார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் முதல் முறையாக விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லையே, ஏன்? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கமல், “தீபிகாவை இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் அவர்தான் நடிக்க மறுத்து விட்டார். நாங்கள் கேட்ட தேதிகல் அவரிடம் இல்லை.
உண்மையில் எனது படத்தின் பைனான்ஸியர்கள்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். எனக்கு அப்படி எதுவும் இல்லை (!?).
இருந்தாலும், இப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இது எனக்கு பெரும் திருப்தி,” என்றார் கமல்.
No comments:
Post a Comment