Saturday 16 June 2012

தமிழ் நடிகைகள் தான் அதிகம் மது, சிகரெட்டுக்கு அடிமையானவர்கள்! – நடிகை சானாகான் சீண்டல்!

    தமிழ் நடிகைகள் பலர் மது அருந்திவிட்டு மப்பில் தள்ளாடிக்கொண்டு போவதை தான் பலதடவை பார்த்திருப்பதாக சானாகான் தெரிவித்துள்ளார். அண்மையில் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டதாக வதந்தி பரவி பரபரக்கப்பட்டவர் தான் சானா கான்.

தற்போது டேர்ட்டி பிக்சர் தமிழ் வேர்சனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த சானா கான் பத்திரிகையாளர் மத்தியில் பேசினார்.

அதன்போது அவர்…நான் மும்பை பெண்ணாக இருந்தாலும், எனக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறேன். வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன். எனக்கு சிகரெட் பழக்கம் கிடையாது. குடிபழக்கமும் இல்லை.

பொதுவாகவே இந்தி நடிகைகளிடம்தான் சிகரெட்-மது பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். இந்தி நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு சிகரெட், மது பழக்கம் அதிகமாக இருக்கிறது. குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே போவதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. மறைத்துவிடுகிறார்கள். என்றார்.

இவரது இப் பேட்டி கோடம்பாக்கத்தில் நடிகைகளை கடுப்பாக்கியுள்ளது.

No comments:

Post a Comment