கொலிவுட்டில் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி சம்பளமாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார்.
அரவிந்த் சாமியிடம் விஷ்ணுவர்தன் கதை சொல்லியிருக்கின்றார். கதையை கேட்ட உடன் திருப்தியடைந்த அரவிந்த் சாமி சம்மதமும் சொல்லியிருக்கின்றார்.
இந்நிலையில் அரவிந்த் சாமியின் சம்பளம் தான் விஷ்ணுவை மயக்கமடைய வைத்திருக்கிறது.ரூ. 2 கோடி கேட்டுள்ளார் அரவிந்த் சாமி. இதை விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் சொல்லியிருக்கிறார்.
உடனே அரவிந்த்சாமிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி ஒப்பந்தம் செய்து, தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சம்பளம் இருபது லட்ச ரூபாய்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கின்றார். இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் நயன்தாரா, உதவி இயக்குனராக பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment