Saturday 21 July 2012

மகத் யாருன்னே எனக்கு தெரியாது : டாப்சி!

I didnt know mahat says tapseeடாப்சிக்காக மனோஜ் மற்றும் மகத் இருவரும் சண்டை போட்டு வரும் நிலையில், மகத் யாரென்றே எனக்கு தெரியாது என டாப்சி கூறியுள்ளார். ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மனோஜூம், மங்காத்தா படத்தில் நடித்த மகத்தும் இரவு விருந்து ஒன்றில் கடுமையான மோதிக் கொண்டனர். இவர்கள் மோதிய சம்பவம் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் சண்டை போட்டதே டாப்சிக்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் படங்களுக்காக டாப்ஸி சென்னை வரும்போதெல்லாம், அவரை மகத் தான் காரில் அழைத்து கொண்டு செல்வதும், ஊர் சுற்றுவதுமாய் இருந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் அப்செட்டான டாப்சி, இப்போது மகத் யாருன்னே எனக்குத் தெரியாது என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும் சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு. மகத் என்னை காதலிப்பதாக சொல்வதும் உண்மையில்லை. இதுவரை நான் அவரை சந்தித்ததே கிடையாது என்று டாப்சி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment