Saturday 21 July 2012

பெயரைக் கட் செய்த டைமண்ட் கவிஞரின் மகன்.





கோலிவுட் படங்களில் ஹீரோவா நடிச்ச ரமேஷான அரவிந்த நடிகரு பெரிசா எடுபடாததால திடீர்னு சான்டல்வுட்டுக்கு என்டராகி அங்கேயே செட்டிலாயிட்டாராம்.. ஆயிட்டாராம்... அங்கேயும் இப்போ போட்டி அதிகமாயிட்டதால தாக்குபிடிக்க முடியலையாம். இதால மறுபடியும் கோலிவுட் மீது காதல் வந்துருச்சாம்... வந்துருச்சாம்... அப்படி இப்படின்னு தூதுவிட்டு கோலிவுட்ல படமொண்ணு பிடிச்சிட்டாராம். இதைவச்சே இங்கே ஸ்டடியாயிடுவேன்னு நட்புங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

திலக நடிகரோட பேரன் அறிமுகமாகுற படத்தோட பாட்டு பங்ஷன்ல சூப்பரான ஆக்டரையும் உலக ஹீரோவையும் பங்கேற்க கூப்பிட்டாங்களாம்... கூப்பிட்டாங்களாம்... உலகம் உடனே ஓகே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... சூப்பர் எதுவும் சொல்லாம அமைதியா இருக்காராம்... இருக்காராம்... விழால அவர் திடீர்னு சர்ப்பிரைஸ் விசிட் அடிப்பாருன்னு விழாக்குழு நம்பிக்கையா இருக்காம்... இருக்காம்...

டைமண்ட் கவிஞரோட வாரிசு, டாடியைபோல பாப்புலர் ஆகலையாம்... ஆகலையாம்.... அதனால நியூமராலஜிப்படி அவர் தன்னோட பேரை குறைச்சி வச்சிகிட்டாராம். ராசி பார்த்து கார்க்கியான பேருக்கு முன்னால இருந்த மதனான இன்னொரு பேரை நீக்கிட்டாராம். தான் பாட்டு எழுதுற படங்கள்ல இந்த பேரைத்தான் யூஸ் பண்ணனும்னு சொல்றாராம்... சொல்றாராம்...

No comments:

Post a Comment