Sunday 15 July 2012

பிரசன்னாவும் பிரியாணியில் இணைந்தார்!


Prassana also joints in biryaniமங்காத்தா படத்திற்கு பிறகு டைரக்டர் வெங்கட்பிரபு இயக்க இருக்கும் படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களின் நாயகி ரிச்சா நடிக்க இருக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் இன்னொரு முக்கிய மற்றும் பவர்புல்லான ரோலில் புதுமாப்பிள்ளை பிரசன்னாவும் நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் அடுத்தமாதம் தான் ஆரம்பமாகிறது. இருந்தும் நாளை ஆடி மாதம் பிறக்க இருப்பதால் சின்னதாக இன்று ஒரு பட பூஜை நடத்தியுள்ளனர். தற்போது படத்திற்கான மற்ற நடிகர்-நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் வேலைகள் நடந்து வருவதாகவும், எல்லாம் தேர்வானதும் விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment