Sunday 15 July 2012

அப்பா இசையில் பாட கொடுத்து வைத்திருக்க வேண்டும் - யுவன் ஷங்கர் ராஜா பெருமிதம்!

I am lucky to sang in fathers music says yuvan shankar rajaடைரக்டர் கவுதம் மேனனின் படைப்புகள் அவரது கதை சொல்லும் நேர்த்திக்காவும், கலை நயத்துடன் எடுக்கப்படும் விதத்துக்காகவும் மட்டுமின்றி இனி

மையான இசைக்காவும் அனைத்து தரப்பட்ட மக்களாலும் பாரட்டப்படும். அதற்கு அவரின் மின்னலே படம் தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா வரையே சாட்சி. அந்தவரிசையில் ஜீவா-சமந்தா நடிப்பில் உருவாகும் நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்காக கவுதம் வாசுதேவ் மேனனுடன் இசைஞானி இளையராஜாவும் இணைவது இசை பிரியர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான சாய்ந்து சாய்ந்து... என்ற பாடலை அப்பாவின் இசையில், யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

இதுகுறித்து யுவன் கூறியுள்ளதாவது, முதலில் அப்பா இசையில் எனக்கு பாட வாய்ப்பு கொடுத்த கவுதமிற்கு ரொம்ப நன்றி. நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத இசை. இதுதான் இசை... அப்பாவின் இசையில் இந்தப்பாட்டை நான் பாட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment