Thursday 19 July 2012

‘வாலு’ படத்தில் சிம்புக்கு வில்லனாக கன்னட நடிகர்



சிம்பு, ஹன்ஷிகா மொத்வானி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் ‘வாலு’ படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள ஆதித்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து ஆதித்யா கூறும்போது,
இப்படத்தில் நான் எதிர்மறையான வேடத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் கிடையாது. அதாவது வில்லன் பின்னால் சுற்றும் நாயகியை எப்படி நாயகன் ஈர்க்கிறார் என்பதை பொழுதுபோக்கு அம்சத்துடன் சொல்லப் போகிறார்கள்.
தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. ரஜினிகாந்த் சார்தான் என்னோட மானசீக குரு. அவருடைய வழியை பின்பற்றி தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளேன்.
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த பிரகாஷ் ராஜ், கிஷோர், சுதீப் போன்ற வில்லன்கள் வரிசையில் நானும் கலக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment