Friday 20 July 2012

நடிகர் ஜீவா படங்களை புறக்கணிக்க தமிழ்நாடு தியேட்டர்கள் சங்கம் அதிரடி முடிவு.






ஜீவா-ஸ்ரேயா ஜோடியாக நடித்த ரௌத்திரம் படம் கடந்த வருடம் ரிலீசானது. தெலுங்கிலும் இப்படத்தை ராச்சா என்ற பெயரில் வெளியிட்டனர். ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை தயாரித்து இருந்தார்.
தமிழ், தெலுங்கில் 'ரௌத்திரம்' படம் தோல்வி அடைந்ததால் தியேட்டர் அதிபர்கள் நடிகர் ஜீவா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தியேட்டர் அதிபர்கள் கூறும் போது, ரௌத்திரம் படத்துக்கு நஷ்ட ஈடு தர சம்மதித்தனர். ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை. எனவே ஜீவா படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
ஜீவா தற்போது 'முகமூடி', நீதானே என் பொன் வசந்தம் படங்களில்  நடிக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கூறும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான். இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட முடிவை எடுப்போம் என்றார். ஆனால் ஆர்.பி.சவுத்ரி இதனை மறுத்தார். யாருக்கும் பணம் தருவதாக உறுதி அளிக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment