Wednesday 18 July 2012

தூத்துக்குடி டு தென்னாப்ரிக்கா!


'மாற்றான்' படத்தினை முடித்து விட்ட சூர்யா, ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சிங்கம் 2' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

'சிங்கம்' படம் முடியும் காட்சியிலிருந்து 'சிங்கம் 2' துவங்குகிறது. 'சிங்கம்' படத்தின் கதைப்படி பிரகாஷ் ராஜ் இறந்து விட்டதால் 'சிங்கம் 2'வில் அவர் இடம் பெறவில்லை.

அவரைத் தவிர மற்ற அனைவரும் 'சிங்கம் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹன்சிகா, சந்தானம், வில்லனாக முகேஷ் ரிஷியும் கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தில் ஒரே சூர்யா இருவேறு பரிமாணங்களில் நடிக்க இருக்கிறாராம். தொடர்ச்சியாக 105 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் ஹரி.

ஹரி முதல் முறையாக இப்படத்தின் காட்சிகளுக்காக தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார். இதுவரை பாடல்களை மட்டுமே வெளிநாட்டில் படம்பிடித்து வந்தார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஹரி " சூர்யா 2 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அனுஷ்கா தொழில் அதிபரின் மகளாகவும், ஹன்சிகா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். விவேக் முக்கிய வேடத்தில் வருவார்.

'சிங்கம்' படத்தில் நடித்த மனோரமாவும் இரண்டாம் பாகத்தில் பங்கு பெறுகிறார். அவர் இப்போது பூரண குணம் அடைந்து விட்டார். உடல் நலம் தேறியபின், அவர் நடிக்கும் படம் இதுதான்.

மும்பையைச் சேர்ந்த முகேஷ் ரிஷியும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். தூத்துக்குடி பின்னணியில் கதை நடப்பதால், பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கு நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடியில் ஆரம்பிக்கும் படம் தென் ஆப்பிரிக்காவில் முடிவடையும். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் எல்லாம் தென் ஆப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

'சிங்கம் 2' படத்திற்கும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment