Sunday 5 August 2012

திரையுலக வாழ்க்கையில் 20 ஆண்டுகளை கடந்த நடிகர் அஜீத்குமார் 51 படங்கள் நடித்துள்ளார்


1995-ல் வந்த 'ஆசை' படத்தின் வெற்றி பிரபலபடுத்தியது. 'வான்மதி', 'காதல்கோட்டை', 'உல்லாசம்', 'காதல் மன்னன்', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படங்கள் அவரை முன்னணி நடிகராக்கியது.


அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து 1999-ல் ரிலீசான 'வாலி' படம் அவரை இன்னொரு உயரத்துக்கு கொண்டு சென்றன. 'அமர்க்களம்', 'முகவரி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களில் அவருக்கு பெரிய நடிகர் அந்தஸ்தை வழங்கின.


'சிட்டிசன்', 'வரலாறு' படங்களில் அஜீத் நடிப்பு பேசப்பட்டது. 'பூவெல்லாம் உன்வாசம்' படத்துக்கு தமிழக அரசிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.


'அசல்', 'மங்காத்தா', 'பில்லா-2' என அவரது சினிமா பயணம் தொடர்கிறது. இதுவரை 51 படங்களில் நடித்துள்ளார். 50-வது படமாக 'மங்காத்தா' வெற்றி பெற்றது. தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படித்தில் நடிக்கிறார். பழைய நடிகை ஸ்ரீதேவியின் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தின் தமிழ் பதிப்பில் கவுரவ தோற்றத்திலும் வருகிறார்.

No comments:

Post a Comment