"பரதேசி படப்பிடிப்பு சமயங்களில், படத்தின் நாயகனான அதர்வாவும், வேதிகாவும், தனிமையில் அமர்ந்து, மணிக்கணக்கில் காதல் மொழி பேசியதாக செய்தி பரவியது. இதுபற்றி அதர்வாவிடம் கேட்டால், "நாங்கள் இருவரும், காதல் மொழி பேசவில்லை; கன்னட மொழியில் தான் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே, கன்னடம் தாய்மொழி என்பதால், சந்தோஷமாக பேசி மகிழ்ந்தோம். ஆனால், கன்னட மொழி மற்றவர்களுக்கு புரியாததால், சிரித்து பேசியதை, காதல் என்று கருதிவிட்டனர் என்று சொல்லும் அதர்வா, தானும், வேதிகாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார்.
No comments:
Post a Comment