Saturday 11 August 2012

உதயநிதி படத்தை இயக்கும் எண்ணம் இல்லை. இயக்குனர் ராஜேஷ்


சிவா மனசுல சக்தி', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என ஹ்யூமர் ஹாட்ரிக் வெற்றி அடித்தார் இயக்குனர் ராஜேஷ்.

மூன்றாவது படத்தில் உதயநிதி ஸ்டாலினை நாயகனாக அறிமுகம் செய்தவர், அடுத்து இப்போது கார்த்தியை இயக்க இருக்கிறார்.

படத்திற்கு 'அழகுராஜா ஆல் இன் ஆல்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தப்பட்டிருக்கிறார். முந்தைய படங்களைப் போலவே நாயகனின் நண்பனாக சந்தானம் கலாய்க்க இருக்கிறார்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை முடித்து விட்டு 'பிரியாணி' படத்தில் நடிக்க இருப்பதால் 'அழகுராஜா' படத்தை கார்த்தி எப்போது தொடங்குவார் என்று கேள்வி தொக்கி நின்றது.

'அழகுராஜா' படப்பிடிப்பு குறித்து ராஜேஷ் " அழகுராஜா ஆல் இன் ஆல் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து விட்டது.

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருக்கிறது. அதற்குள் கார்த்தி 'பிரியாணி' படத்தின் ஒரு ஷெட்யூல் முடித்து இருப்பார் " என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கும் 'ஆண்பாவம்' படத்தின் ரீமேக் உரிமையை தான் இயக்கவில்லை என்றும், ரீமேக் படங்களை இயக்கும் எண்ணம் தனக்கு எப்போதும் கிடையாது என்றும் தெரிவித்து இருக்கிறார் ராஜேஷ்.

No comments:

Post a Comment