Sunday 5 August 2012

பொன்னியின் செல்வனை தொடராக எடுக்க முயற்சிக்கும் மூன்றெழுத்து சேனல்.




புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கலைஞானி கமல்ஹாசன், டைரக்டர் மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்தும் செ.மீ கூட நகராத ஆசைதான் 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக எடுப்பதென்பது. இந்த ஆசை தற்போது டைரக்டர் செல்வராகவனுக்கும் வந்திருப்பதால் 'பேஸ்த்' அடித்துக் கிடக்கிறது ஏரியா.

ஒருவேளை அது நடந்துவிட்டால் செல்வராகவனின் வேகத்திற்கு இப்படம் குறைந்தது பத்து வருட தயாரிப்பாக இழுக்கும் என்பதை இப்பவே யூகித்துவிடலாம். இதற்கிடையில் இந்த முயற்சியில் ஒரு மூன்றெழுத்து சேனல் இறங்கியிருக்கிறதாம்.

சின்னத்திரையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கும் இந்த சேனலால் இது முடியும் என்றாலும், நடக்கிற வரைக்கும் நம்புவானேன்?

No comments:

Post a Comment