நடிகை திரிஷா 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இதுவரை 48 படங்களில் நடித்து விட்டார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.
சிம்ரன்தான் அதிக நாட்கள் சினிமாவில் கதாநாயகியாக நீடித்தார். அவருக்கு பின் ஜோதிகாவும் நீண்ட நாட்கள் நடித்தார். இவர்களை தொடர்ந்து திரிஷாவும் சினிமாவில் நிலைத்து இருக்கிறார்.
இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் பத்து வருடங்களாக கதாநாயகியாக நான் நடித்து கொண்டிருப்பதற்கு ரசிகர்களே காரணம். அவர்கள் இல்லாமல் இதை சாதித்து இருக்க முடியாது. எனது கடின உழைப்பும் இதில் இருக்கிறது.
வெற்றி-தோல்வி பற்றி வருத்தப்பட்டது இல்லை. ஒவ்வாரு படத்திற்கும் முழு உழைப்பை கொடுத்தேன். தெலுங்கு நடிகர் ராணாவுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அவரை பத்து வருடமாக எனக்கு தெரியும். குடும்ப நண்பராக இருக்கிறார். நாங்கள் காதலிக்கவில்லை.
திருமணம் என்பது வாழ்க்கையில் சந்தோஷமான விஷயம். அதை நான் தேடிப் போகமாட்டேன். பொருத்தமான ஆணை சந்தித்ததும் திருமணத்துக்கு சம்மதிப்பேன். எப்போது நடக்க வேண்டுமோ அப்போது என் திருமணம் நடக்கும்.
நான் ஒல்லியாக இருப்பதற்கு காரணம் உணவு கட்டப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகும். எதிர்மறையான சிந்தனைகளை மனதில் வளர விடமாட்டேன். அதுவும் எனது உடல் அமைப்பை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தால் மன அழுத்தம், கவலைகள் வராது. நான் ஏதேனும் பிரச்சினைகளுடன் சங்கடமாய் வீட்டுக்கு வந்தாலும் நாயை பார்த்ததும் அவை பறந்து போகும். தமிழில் நான் நடித்ததில் எனக்கு பிடித்த படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
No comments:
Post a Comment