Thursday 9 August 2012

நாற்பது கோடி கொடுத்து சூரயாவை மடக்கிய லிங்குசாமி.




     லிங்குசாமி படத்தில் சூர்யா நடிப்பாரா, மாட்டாரா என்ற சந்தேகத்தின் உதட்டில் செமத்தியான ஒரு திண்டுக்கல் பூட்டை மாட்டியிருக்கிறார்கள் இருவரும். லிங்குவின் கதை சூர்யாவுக்கு பிடித்ததும், அதில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்க முன் வந்ததும் பழங்கதை. ஆனால் யார் பேனரில் இப்படத்தை தயாரிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் லிங்குவின் படத்திலிருந்தே விலகும்படி ஆனது சூர்யாவுக்கு.

கோடிகள் கிடைக்கும் என்றால் கொசுவர்த்தி விளம்பரங்களில் கூட நடிக்க தயாராக இருக்கும் சூர்யாவை அதே பாணியில் சென்று மடக்கினாராம் லிங்கு. இதுவரை சூர்யாவுக்கு யாரும் வழங்கியிராத ஒரு சம்பளத்தை வழங்குவதாக கூறினாராம். (தெலுங்கு உரிமைக்கான மதீப்பீட்டையும் சேர்த்து சுமார் 'நாற்பது' என்கிறது கோடம்பாக்க ஆந்தை)

ஆடிப்பெருக்கு தினத்தன்று வசதியான ஒரு தொகையை அட்வான்சாக கொடுத்தாராம் சூர்யாவுக்கு. 'மாற்றான்' படத்தின் வியாபாரம் எழுபதிலிருந்து எண்பது கோடியை எட்டும் என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் நாற்பதை சூர்யாவுக்கு கொடுத்தாலும், லிங்குவின் அக்கவுண்ட்டை விட்டு லட்சுமிதேவி எங்கேயும் ஷிப்ட் ஆகப்போவதில்லை.

No comments:

Post a Comment