Monday 27 August 2012

மனமுடைந்து அழுத அனுஷ்காவுக்கு சமாதானம் செய்த கார்த்தி.


இரண்டாம் உலகம்' படத்தினை முடித்து விட்டு அனுஷ்கா திரும்பி இருப்பதால் 'அலெக்ஸ் பாண்டியன்' படக்குழுவினர் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

ஆனால், அனுஷ்காவால் மறுபடியும் 'அலெக்ஸ் பாண்டியன்' படக்குழுவிற்கு பிரச்னை வந்திருக்கிறது.

'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்புக்கு வந்த அனுஷ்கா, தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். அவர் மேக்கப் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம். "மேக்கப்பிற்கு என்று நாங்கள் இருக்கும் போது எப்படி அனுஷ்கா மட்டும் தனியாக ஒரு பெண்ணை அழைத்து வரலாம்" என்று மேக்கப் யூனியன் ஆட்கள் கோபமாகி விட்டார்கள்.

இதனால் மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பிற்கு சென்று அனுஷ்காவிற்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். மேலும் அனுஷ்காவையும் திட்டி இருக்கிறார்கள்.

இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுதுகொண்டே அந்த இடத்தினை விட்டுச் சென்று விட்டாராம். நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி, இவ்விஷயத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்.

மேலும் அனுஷ்காவிற்கு மேக்கப் போட்ட பெண் வெளியேறிய பிற்கு தான் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்து இருக்கிறது.

No comments:

Post a Comment