சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் அசின். புதிய நடிகைகளின் வரவுகளால் சரியான வாய்ப்புகள் இன்றி இந்தி பக்கம் சென்று விட்டார். அவர் தலைக்கனத்துடன் இருப்பதாக விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது குறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், சினிமாவுக்குள் வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்து விட்டேன். இந்திக்கு போனதும் அசினுக்கு தலைக்கனம் பிடித்து விட்டது, தென்னிந்திய திரையுலகை கேவலமாக பார்க்கிறார் என்றும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தென்னிந்திய திரையுலகம்தான் எனக்கு நல்லதொரு சினிமா வாழ்க்கையை அமைத்து கொடுத்தது. அதனால் அதன்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் கண்டப்படி நிறம் மாறும் பச்சோந்தி அல்ல. எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதுமாதிரியே மாறி விடுவேன். எனக்குள் இருக்கும் அத்தனை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment