Wednesday 1 August 2012

தாண்டவம் படத்தில் கண் தெரியாதவராக நடிப்பதற்காக வெளிநாட்டவரிடம் பயிற்சி பெற்றேன். விக்ரம்


      விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன் இணைந்து நடிக்கும் படம் ‘தாண்டவம்’. விஜய் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-


‘தெய்வத் திருமகள்’ படத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து இந்த படத்தை செய்கிறோம். வித்தியாசமான படம். அறுபத்தைந்து நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தினோம். அதிகாலையிலிருந்து துவங்கி மாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. மீண்டும் 7 மணிக்கு தொடர்ந்தோம். தினமும் காலை முதல் இரவு வரை கஷ்டப்பட்டு வேலை செய்வோம்.

இயக்குனர் விஜய் தூங்கி, சாப்பிட்டு பார்த்ததே இல்லை. பம்பரமாக பணியாற்றினார். ‘தாண்டவம்’ நல்ல கதை. படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கும். அனுஷ்கா, எமியின் ‘கெமஸ்ட்ரி’ நன்றாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையில் கலக்கி உள்ளார். இரு வேடத்தில் நடக்கிறேன். அதில் ஒன்று பார்வையற்ற கேரக்டர்.

வெளிநாட்டில் டேனியல் கிஷ் என்ற பார்வையற்றவர் யார் துணையும் இன்றி சப்தங்களின் எதிரொலியை துல்லியமாக உணர்ந்து சராசரி மனிதனை போல் சைக்கிளும் ஓட்டுகிறார். அவரை முன் மாதிரியாக வைத்து பார்வையற்ற வேடத்தை செய்கிறேன். அவரிடம் பயிற்சியும் பெற்றேன்.

‘காசி’ படத்தில் கண் தெரியாத வேடத்தில் நடித்தேன். அதேபோல் பல படங்களில் பார்வையற்ற கேரக்டர்களில் வித்தியாசங்கள் காட்டி என்னால் நடிக்க இயலும்.

இவ்வாறு விக்ரம் கூறினார்.

அப்போது இயக்குனர் விஜய், நடிகை எமி, இசையமைப்பாளர் ஜி.பி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், யு.டி.வி. தனஞ்செயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment