பிரசன்னாவிற்கு மனைவியாக இருக்க விரும்பவில்லை என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.சினேகா- பிரசன்னா திருமணம் முடிந்தாலும் அவர்கள் ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகள், விளம்பரங்கள் விறுவிறுப்பாகவே இருக்கின்றது.
சமீபத்தில் சினேகா- பிரசன்னா பிரிவிற்கு யார் காரணம் என்ற ஒரு விளம்பரம் வந்து தமிழகத்தை கலக்கியது.
இந்நிலையில் மற்றொரு எதிர்மறையான பதிலை கொடுத்து சினேகா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் சென்னையில் ஆடை, அலங்கார நடைமேடை விழா நடந்தது.
இதில் சினேகா- பிரசன்னா இருவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின்பு, சினேகாவிடம் பிரசன்னாவோட மனைவியாக எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க, பிரசன்னாவிற்கு மனைவியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவருடைய காதலியாக இருக்க விரும்புவதாகவும் நடிகை சினேகா பதிலளித்தார்.
இதே நிகழ்ச்சி சென்ற வருடம் நடந்தபோது இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் அப்போது காதலர்கள் என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
No comments:
Post a Comment