"பருத்திவீரன் கார்த்தி, சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றில், தன் பள்ளி நாட்களை ரீ-வைண்ட் செய்து, அவரின் மனதின் அடிவாரத்தில் தங்கியிருந்த காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தினார். "சென்னை டவுன் பஸ்சில், பள்ளி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் தொங்குவதைப் பார்க்கும்போது, என்னோட பள்ளி நாட்கள் நினைவுக்கு வரும். பள்ளி நாட்களில், பசங்க பஸ் படிக்கட்டில் தொங்கும், சாகசத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அப்படி சாகசம் செய்யும் பசங்க மீது, பொண்ணுங்க பார்வை திரும்பும். அதனால், நானும் படிக்கட்டில் தொங்க ஆசைப்பட்டேன். நான், அப்ப குண்டாக இருப்பேன். அதனால எந்த பொண்ணும், என்னை திரும்பிப்பார்க்கவில்லை. படிக்கட்டில் தொங்கினால், பொண்ணுங்க பாப்பாங்க, அதில், ஏதாவது ஒரு பொண்ணு லவ் பண்ணும், அப்படிங்கற ஏக்கம் வந்தது. படிக்கட்டில் எப்படி தொங்குவது என்பது குறித்து, என் நண்பன் பயிற்சி கூட கொடுத்தான். ஆனாலும், என்னால் படிக்கட்டில் தொங்க முடியவில்லை. அதனால, எந்தப் பொண்ணும் என்னை திரும்பி பார்க்கவில்லை என்றார் கார்த்தி.
No comments:
Post a Comment