Tuesday 14 August 2012

சிம்புவின் போடா போடி படத்தில் நடனக்காட்சி கிளைமாக்ஸ்.


நாயகன் மரணம், நாயகி மரணம், வில்லன் மரணம், வில்லன் மனம் மாறுதல், வில்லனை ஜெயிக்கும் நாயகன் இது தான் தமிழ் வணிகப் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகள் டிரண்ட்.

ஒரு சில படங்கள் மட்டுமே இது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் மாறி இருக்கும். அந்த வரிசையில் இடம் பெற இருக்கிறது சிம்பு நடித்து வரும் 'போடா போடி' திரைப்படம்.

சிம்பு, வரலெட்சுமி நடித்து வரும் இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. தரண் இசையமைத்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு இசை, நடனம் சம்பந்தப்பட்ட படமாகும். விக்னேஷ் சிவா இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.

'போடா போடி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நடனக்காட்சியாக அமைய இருக்கிறதாம். இக்காட்சிக்காக கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிம்பு, வரலெட்சுமி மற்றும் ஷோபனா மூவரும் நடனமாடுவது போன்று அமைத்து இருக்கிறார்களாம். இக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறது படக்குழு.

இக்காட்சிகள் அனைத்து முடிந்தவுடன் 'போடா போடி' படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடைகிறது. இதர பணிகளையும் முடித்துவிட்டு நவம்பர் மாதம் படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment