Thursday 9 August 2012

விஜய்க்கு வில்லனாகிறாரா நான் ஈ சுதீப்.


துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய்.

கெளதம் மேனன் இயக்கி வரும் ' நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை முடித்து விட்டு யோஹனில் கவனம் செலுத்த இருக்கிறார்.

'யோஹன் அத்தியாயம் ஒன்று' படம் முழுக்க முழுக்க பிரிட்டனில் உருவாக இருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக யார் என்பதில் இப்போதே முன்னணி நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் படத்திற்கு வில்லனாக நான் ஈ படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்ற சுதீப் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்தன.

கெளதம் மேனன், சுதீப் இருவருமே இத்தகவலை மறுத்து இருக்கிறார்கள். கெளதம் மேனன் 'நீதானே என் பொன்வசந்தம்' படம் தான் இப்போதைக்கு எனது முழுக்கவனமும், யோஹன் அதற்கு பிறகு தான் " என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment