Thursday 9 August 2012

கரையை நெருங்கும் கடல்!

   இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களுக்கு சீக்கிரம் கண்ணுக்கு குளிர்ச்சியான விருந்து காத்திருக்கிறது. 'கடல்' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். விரைவில் 'கடல்' வெளியாகிவிடும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக நான்கு பாடல்களை முடித்து கொடுத்து விட்டார்.

கேரளாவில் படபிடிப்பு நடைபெற்றது. அங்கு நாயகன், நாயகி பங்கேற்ற ஒரு அழகான காதல் பாடலை படமாக்கினார்கள்.

அந்தமான், கேரளா பகுதிகளிலே மிக அதிகமாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் இருந்து 60 கிமீ தூரத்தில் இருக்கும் மனபாட் கிராமத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வைரமுத்து எழுதிய காதல் பாடலை படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தில் வைரமுத்து மகன் மதன் கார்கி மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறார்.

No comments:

Post a Comment