Sunday 5 August 2012

காதலன் பெயரை முழங்கையில் பச்சை குத்திய எமி ஜாக்சன்.


  நயன் தாராவை தொடர்ந்து காதலன் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார் எமி ஜாக்ஸன். பிரபுதேவா,நயன்தாரா காதல் ஜோடி கோலிவுட்டில் பரபரப்பாக வலம் வந்தது. அப்போது பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்திக்கொண்டார் நயன் தாரா.

பின்னர் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதே பாணியில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். ‘மதராஸ பட்டணம்’ படத்தில் அறிமுகமான லண்டன் நடிகையான இவர் இந்தியில் ‘ஏக் தீவனா தா’ என்ற படத்தில் நடித்தார். அப்போது பட ஹீரோ பிரதீக்கிற்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு சாட்சியாக ஒருவர் பெயரை ஒருவர் கைகளில் பச்சை குத்திக்கொண்டனர். எங்கு சென்றாலும் ஜோடியாக சென்றனர். ஆனால் பச்சை குத்திக்கொண்டதை இருவருமே உறுதி செய்யவில்லை.


இந்நிலையில் ‘தாண்டவம்’ பட கேசட் ரிலீஸ் விழாவுக்காக எமி ஜாக்ஸன் சென்னை வந்தார். அப்போது வலது முழம் கையில் பச்சை குத்தி இருப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் கிசுகிசுத்தனர். அவரை நெருங்கி விசாரித்தபோது அது காதலன் பிரதீக் பெயர் என்பதை ஒப்புக்கொண்டார். ‘மேரா பியார் மேரா பிரதீக்’ (என்னுடைய காதல் என்னுடைய பிரதீக்) என்று பச்சை குத்தி இருக்கிறார்.

No comments:

Post a Comment