கௌதம் இயக்கத்தில் வெளியாகவுள்ள, இளையதளபதி யின் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் கைவிடப்படுவதாக செய்தி வெளியகியிருந்தது.
அதனை மறுக்கும் விதத்தில் பேசியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்…
நீதானே என் பொன்வசந்தம் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
துப்பாக்கி திரைப்படம் முடிவடைந்தவுடன் யோஹன் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான். படத்தின் வெற்றியைப் பொறுத்து ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் போல யோஹனின் அடுத்தடுத்த சீரிஸுகளை எடுக்கலாம்.
என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை இளையதளபதி தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment