Thursday 9 August 2012

விஜய்,கெளதம் மேனன் மோதல். யோவான் படம் டிராப்.



  

விஜய் நடிக்க கவுதம் மேனன் இயக்க இருந்த படம் கைவிடப்படும் என தெரிகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் ‘யோவான் அத்தியாயம் ஒன்று. இப்பட ஷூட்டிங் இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று கடந்து ஆண்டே அறிவிக்கப்பட்டது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

அதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் ஜீவா, சமந்தா நடிக்கும் ‘நீ தானே என் பொன் வசந்தம் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார் கவுதம் மேனன். இதையடுத்து நீண்ட நாட்களாக ஆலோசனையில் இருக்கும் சூர்யாவுடனான ‘துப்பறியும் ஆனந்த் ஷூட்டிங்கை தொடங்குவது பற்றியும் கவுதம் ஆலோசித்து வருகிறார். இதனால் விஜய்யின் யோவான் பட ஷூட்டிங் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரீடம் விஜய் இயக்கத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறார் விஜய். தற்போது தாண்டவம் படத்தின் இறுதிகட்ட பணிகளில் இயக்குனர் விஜய் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார். அதன் பணி செப்டம்பருடன் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே இவர் இயக்கும் படத்தில் அக்டோபர் மாதம் முதல் விஜய் நடிப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

அதே நேரம் யோவான் படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணி முழுமை அடையவில்லை என்றும் இதனால் விஜய்,கவுதம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யோவான் படம் கைவிடப்படும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment