கோலிவுட்டின் ஒன் அண்ட் ஒன்லி காஸ்ட் எஃபெக்டீவ் ஹீரோ என்றால் அது ஜீவாதான்!
ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு , விஷால் என எல்லா இளம் ஹீரோக்களோடும் நட்புடன் பழகும் ஜீவா, கார்த்தி மற்றும் சூர்யா வட்டாரத்தில் இருந்து சற்று விலகியே இருந்து வந்தார். ஆனால் தற்போது சூர்யா பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க ஓப்புக்கொண்டிருகிறார்.
சுந்தர்.சி. நடித்த தலைநகரம், அர்ஜூன் நடித்த மருதமலை போன்ற படங்களை இயக்கியவர் சுராஜ். சுந்தர்.சியின் உதவியாரான இவர், தற்போது கார்த்தி நடிக்கும் அலெக்ஸ்பாண்டியன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு இவர் இயக்கும் படத்தில்தான் ஜீவா நடிக்க ஒப்புக்க்கொண்டிருகிறாராம்!
தற்போது நீதானே என் பொன் வசந்தம், முகமூடி, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜீவா, இந்தப் படங்களுக்கு பிறகு, சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்றும் சூர்யா நேரே ஜீவாவுக்கு போன் செய்து “ இந்தக்கதை உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்” என்று சொன்னதை முன்னிட்டு, க்ரீன் ஸ்டூடியோவுக்கு கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறராம்!
ஜீவா ஒப்புக்கொள்ள இன்னொரு காரணம், அவருக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் தர க்ரீன் ஸ்டூடியோ தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்கிறார்கள்! ஒருபெரிய மாஸ் ஹீரோ இன்னொரு ஹீரோவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முன்வந்ததே பெரிய விஷயம்தாம்போய்!
No comments:
Post a Comment