Thursday 9 August 2012

நயன்தாராவுடன் காதலா? முட்டாள்தனமானது என்கிறார் சிம்பு!



Love with Nayantara? Simbu is nonsense!


நயன்தாராவுடன் மீண்டும் காதல் என்பது முட்டாள் தனமானது என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். நயன்தாராவும், சிம்புவும் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென சந்தித்து பேசினர். நடிகர்-நடிகைகள் பலர் இந்த விருந்தில் பங்கேற்றார்கள். நயன்தாராவும், சிம்புவும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் நடிகர்களாக உள்ளோம். ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறோம். நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் காதல் என்று சொல்வது முட்டாள்தனமானது. நாங்கள் எங்களது நட்பை பகிர்ந்து கொள்கிறோம். சினிமா சம்பந்தமான விழாக்களிலும் பேசிக்கொள்கிறோம். அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment