நடிகை ப்ரணிதா கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. தொடர்ந்து கார்த்தியின் சகுனி படத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போன ப்ரணிதா, கன்னட திரையுலகிற்கு சென்று வாய்ப்பு வேட்டையில் இறங்கினார். இப்போது அவர் மூன்று கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றி ப்ரணிதா அளித்துள்ள பேட்டியில், தமிழில் நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். இப்போதைக்கு கன்னட படங்களில் பிஸியாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment