ரஜினிக்கு மீண்டும் உடல்நலமில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக உலவி வருகிறது. சிவாஜி 3டி பட வெளியீட்டில் இது குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகள் கவலை அளிப்பதாக உள்ளது. அவர் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையால் மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார். இனி அவருக்கு சாவே கிடையாது அவர் இப்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கடந்த சில தினங்களாக என்னோடு கம்பன் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 4 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கம்பன் விழா உரைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நானே சாட்சி. இதோ இப்போது உங்கள் முன் ஆரோக்கியமாக, உற்சாகமாக நின்று கொண்டிருக்கிறார். எனவே அவரைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கும், கோடான கோடி ரசிகர்களுக்கு மனவருத்தத்தை உருவாக்க வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன். என்றார்.
Tuesday 14 August 2012
ரஜினி உடல்நிலை பற்றி வதந்தி கிளப்பாதீர்கள்: எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்
ரஜினிக்கு மீண்டும் உடல்நலமில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக உலவி வருகிறது. சிவாஜி 3டி பட வெளியீட்டில் இது குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகள் கவலை அளிப்பதாக உள்ளது. அவர் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையால் மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார். இனி அவருக்கு சாவே கிடையாது அவர் இப்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கடந்த சில தினங்களாக என்னோடு கம்பன் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 4 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கம்பன் விழா உரைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நானே சாட்சி. இதோ இப்போது உங்கள் முன் ஆரோக்கியமாக, உற்சாகமாக நின்று கொண்டிருக்கிறார். எனவே அவரைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கும், கோடான கோடி ரசிகர்களுக்கு மனவருத்தத்தை உருவாக்க வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன். என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment