Monday 13 August 2012

ரசிகர்களுக்கு நமீதா அட்வைஸ்!!

Namitha adivces to her fansநிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது; எனவே நிலத்தில் எல்லோரும் முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகை நமீதா தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகை நமீதா இப்போது சினிமாவில் நடிப்பதைக்காட்டிலும் விளம்பர நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க தொடங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழிலில் அவர் ரொம்ப தீவிரம் காட்டி வருகிறார். மும்பையில் சொந்தமாக கம்பெனி துவங்கி கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விலைக்கு கொடுக்கிறார்.

நமீதாவின் ரியல் எஸ்டேட் பிஸினஸ் குறித்து அறிந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்களது நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி நமீதாவுக்கு அழைப்பு விடுத்தது. கும்மிடிப்பூண்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதா, ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது, சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது அவசியம். இன்று தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானதாக உள்ளது. தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. அதுபோல் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. எனவே பணத்தை இவ்விரண்டிலும் முதலீடு செய்யுங்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment