Friday 17 August 2012

இரண்டாம் உலகத்திற்காக அலெக்ஸ் பாண்டியனை பகைத்து கொள்ளும் அனுஷ்கா.


செல்வராகவன் இயக்கும் படம் "இரண்டாம் உலகம்'. ஆர்யா ஹீரோ. அனுஷ்கா ஹீரோயின். இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

ஏற்கனவே சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக "அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையே செல்வராகவன் படத்திற்காக ஜார்ஜியா நாட்டுக்கு சென்று விட்டார். மாதக்கணக்கில் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவதுடன், சில நாள்கள் ஷூட்டிங் நடத்தாமல் அனுஷ்காவின் கால்ஷீட்டை செல்வராகவன் வீணாக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் "அலெக்ஸ் பாண்டியன்' ஷூட்டிங்கில் அனுஷ்கா பங்கேற்க முடியாமல் இருக்கிறார். அவர் வராததால் "அலெக்ஸ் பாண்டியன்' ஷூட்டிங் பாதித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையறிந்த செல்வராகவன் ""இரண்டாம் உலகம்' ஷூட்டிங் திட்டமிட்டப்படிதான் நடந்து வருகிறது. யாருடைய கால்ஷீட்டையும் வீணாக்கி, எந்த படத்துக்கும் இடையூறாக இல்லை'' என தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அனுஷ்காவும் தன் டிவிட்டர் பக்கத்தில் ""திட்டமிட்டப்படியே எல்லாம் நடக்கிறது'' என கூறியிருக்கிறார். எது உண்மையோ!

No comments:

Post a Comment