Monday 27 August 2012

ஏதேனும் ஒரு படத்தில் தாடி இல்லாமல் நடிப்பேன். சசிகுமார்



இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் படம் சுந்தரபாண்டியன், இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார்.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இரு பாடல்களை நிருபர்களுக்கு திரையிட்டு காட்டி சசிகுமார் அளித்த பேட்டி வருமாறு:-

ஒரு பெண்ணை மீட்கிற கதையே சுந்தரபாண்டியன், ஆக்ஷன், காதல், நட்பு போன்றவையும் படத்தில் இருக்கும். இதில் நான் ரஜினி ரசிகனாக வருகிறேன். எனவே படத்தில் சில சீன்களில் அவரை பின்பற்றி நடித்துள்ளேன்.

இந்த படத்திலும் தாடி மீசையுடன் வருகிறேன். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இருந்து தாடி எனக்கு ஒரு அடையாளமாகிவிட்டது. ஏதேனும் ஒரு படத்தில் தாடி இல்லாமல் நடிப்பேன். அடுத்த வருடம் மீண்டும் படங்கள் இயக்குவேன். பத்து புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி படங்கள் தயாரிப்பது என் திட்டமாக உள்ளது. தற்போது இரு புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி விட்டேன்.‘சுந்தரபாண்டியன்’ பட தலைப்புக்கு சர்ச்சை எதுவும் இல்லை. ஏற்கனவே இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, இனிகோ, பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி மற்றும் இசையமைப்பாளர் ரகுநந்தன், ஆகியோரும் பங்கேற்று பேசினர்.

No comments:

Post a Comment