மணிரத்னம் இயக்கி வரும், "கடல் படமும், சீனுராமசாமி இயக்கும், "நீர்ப்பறவையும், ஒரே மாதிரியான கதையில் உருவாகி வருவதாக, கோலிவுட்டில் செய்தி உலவுகிறது. இதுகுறித்து, இயக்குனர் சீனுராமசாமியிடம் கேட்டபோது, "களம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். ஆனால், கதையும், பிரச்னைகளும், கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்கிறார். காரணம், மணிரத்னம், கப்பலில் சென்று மீன் பிடிப்பவர். நான், நாட்டுப் படகில் சென்று மீன் பிடிப்பவன். அவரிடம், நங்கூரம் உள்ளது. என்னிடம், நானே கரைக்குத் திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு தேசிய நெடுஞ்சாலை, நானோ, கிராமத்திற்கு போகும் ஒரு சிறிய ஒத்தையடி பாதை. அதனால், அத்தனை பெரிய இயக்குனர் படத்துடன், என் படத்தை ஒப்பிடுவதே தவறு என்கிறார் சீனுராமசாமி.
No comments:
Post a Comment