Wednesday 1 August 2012

SIIMA விழாவில் ஆரம்பித்த நட்பை தொடரும் சிம்பு,தனுஷ்.


       துபாயில் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் ஏற்பட்ட நட்பு, சிம்பு - தனுஷ் இருவரையும் நெருங்கிய நண்பர்களாக ஆக்கி இருக்கிறது.

அடிக்கடி பார்ட்டியில் ஒன்றாக பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்தார்கள்.

தனுஷ் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றதில் இருந்து தமிழ் திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்து இருக்கிறது. காரணம் தனுஷிற்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் பார்ட்டி கொடுத்தவர் சிம்பு என்பது தான்.

தனுஷின் நெருங்கிய நண்பர்கள், குடும்ப நண்பர்கள், படங்களில் தனுஷுடன் நடித்தவர்கள் என அனைவரையும் ஒன்றாக அழைத்து பார்ட்டி ஒன்றை தயார் செய்தார் சிம்பு.

அந்த இடம் முழுவதுமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தனுஷ் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த நெருங்கிய நண்பர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தனுஷ் சிறிது நேரம் எதுவுமே பேசவே இல்லையாம்.

அதுமட்டுமன்றி 'ஆடுகளம்' படம் தனுஷிற்கு பல்வேறு விருதுகள் பெற்றுக் கொடுத்ததால், பிறந்த நாள் கேக்கின் மீது சேவல் போலவே வடிவமைத்து இருந்தார் சிம்பு.

சிம்பு இவ்வாறு தனக்கு ஒரு பிறந்த நாள் பார்ட்டி கொடுப்பார் என்று சிறிதும் எதிர்பாராத தனுஷ் மனம் நெகிழ்ந்து போய்விட்டாராம்.

அப்பார்ட்டியில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, சரத்குமார், ராதிகா சரத்குமார், சந்தானம், தமன்னா, வெற்றிமாறன், ஜெய், அனிருத், விஜய் ஜேசுதாஸ், பிரேம்ஜி, அமலா பால், நரேன், பார்வதி ஒமணக்குட்டன் என ஒரு நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு வாழ்த்தியது.

பிறந்த நாள் பார்டி குறித்து தனுஷ் " எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமன்றி எனக்கு சர்ப்ரைஸாக பார்ட்டி கொடுத்த சிம்புவிற்கு நன்றி " என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment