Friday 7 September 2012

செப்டம்பர் 10.. 'துப்பாக்கி'யான்னு தெரியும்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'துப்பாக்கி' தீபாவளி வெளிவரும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தினை வாங்கி வெளியிட இருக்கிறது ஜெமினி நிறுவனம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் தலைப்பு மீதான வழக்கு செப்டம்பர் 10 நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அன்று வழக்கு முடிவு பெறவில்லை என்றால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு வேறு தலைப்பு வைத்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.

'தீபாவளி முதல் சரவெடி' என்று டிவிட்டர் இணையத்தில் தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 'துப்பாக்கி' தலைப்பு இல்லையென்றால் படத்தலைப்பு 'சரவெடி'யா?

'கொசுறு' கபாலி : "படத்துக்கு கதை முடிவு பண்றதை விட, டைட்டில் முடிவு பண்ணறதே பெரிய வேலையா இருக்கும் போல! "

No comments:

Post a Comment