Monday 3 September 2012

தமிழ் மக்களை மறக்க முடியாது: ஸ்ரீதேவி

I will never forget tamil fans says sridevi நீண்ட இடைவெளியிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஸ்ரீதேவி. தற்போது அவர் " இங்கிலீஷ் - விங்கிலீஷ் என்கிற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ரீதேவி கூறுகையில், "நான் தமிழ் நாட்டில் பிறந்தவள். தமிழ் மக்களை மறக்கவே மாட்டேன். என்னோட குழந்தைகளுக்கு தமிழ் கத்து கொடுத்திருக்கேன். திருமணத்துக்குப் பிறகு சினிமாவ விட்டு விலகியிருந்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்களை பராமரிப்பதில், நாட்கள் ஓடி விட்டன. இப்போது, குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அதனால, மறுபடியும் சினிமால நடிக்க வந்துட்டேன். தமிழ் படங்களில் நடிச்சு 26 வருடங்களாகி விட்டது. எனக்குப் பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கேன். மறுபடியும் ரஜினி, கமலுக்கு ஜோடியா நடிக்க தயாரான்னு கேட்கறாங்க. அவர்கள் தயாரென்றால், நானும் தயார் என்றார்.

No comments:

Post a Comment