Monday 3 September 2012

கதை மேல நம்பிக்கை இருக்கு!

    'கும்கி' படத்தினைத் தொடர்ந்து 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம் பிரபு.

இப்படத்திற்கும், 'கும்கி' படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. 'கும்கி' படத்தினைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இப்படத்தினையும் தயாரிக்க முன்வந்து இருக்கிறது.

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிக்கும் கும்கி படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக இரண்டு யானைகள் மோதும் காட்சியினை கிராபிக்ஸ் உருவாக்கி வருகிறார்கள். படத்தினை தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்களாம்.

தீபாவளிக்கு 'துப்பாக்கி', 'வாலு' என பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவருகிற கவலை எல்லாம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இல்லையாம், காரணம் " எனக்கு 'கும்கி' கதையின் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது " என்று தெரிவித்து விட்டாராம் லிங்குசாமி.

'எங்கேயும் எப்போதும்' படத்தினை இயக்கிய சரவணன் அடுத்து தான் இயக்க இருக்கும் படத்திற்கு விஷால், ஆர்யா என்று பேச்சுவார்த்தை நடத்தியவர் தற்போது விக்ரம் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

முதல் படம், இரண்டாவது படம் இரண்டையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு.

No comments:

Post a Comment