தாண்டவம் படத்தையடுத்து செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து முடித்து விட்ட அனுஷ்கா, இப்போது சுராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன், ஹரியின் சிங்கம்-2 படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களையடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்தபோது மறுத்து விட்டாராம். காரணம், தற்போது தமிழில் பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறேன். அதோடு சிறுத்தை சிவா இயக்கும் அஜீத் படத்திலும் அடுத்து நடிக்கிறேன். அதனால் இந்த நேரத்தில் தெலுங்கிலும் கவனத்தை சிதற விட்டால், தமிழில் சரியான இடத்தை பிடிக்க முடியாது. அதனால் தெலுங்கு உள்பட மற்ற மொழிகளில் இருந்து வரும் எந்த புதிய படங்களையும் இப்போது நான் ஏற்பதில்லை என்கிறார் அனுஷ்கா.
No comments:
Post a Comment