Saturday 15 September 2012

துப்பாக்கியில் இருந்து வந்து புதிய புள்ளட்!!!

விஜய் நடிக்க, கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பாய் வளர்ந்து வரும் `துப்பாக்கி’ படம், இதுவரை வந்த ஆக்ஷன் படங்களையெல்லாம் சாதாரணமாக்கி விடும் என்கிறார்கள்.

அதை நிரூபிக்கும் விதத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை மட்டும் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் 7 கேமராக்களை கொண்டு படம் பிடித்திருக்கிறார்கள். இந்த பரபரப்பான காட்சியில் விஜய்யுடன் 60 ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

படம் பற்றி விஜய்யின் ஸ்டேட்மென்ட் இதோ:

“துப்பாக்கி படம் புதிய விஜய்யாக என்னை ரசிகர்களிடம் அறிமுகம் செய்யும். ஏ.ஆர்.முருகதாசின் கதை தான் துப்பாக்கி. எனது கேரக்டர்அந்த துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டா. மொத்தத்தில் என் ரசிகர்களுக்கு பிரமாண்ட விருந்து நிச்சயம்” என்கிறார்.

No comments:

Post a Comment