பாரதிராஜா இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் ஆரம்பத்தில் ரொம்ப ஆர்வமாகத்தான் கமிட்டானார் கார்த்திகா. ஒருகட்டத்தில் அப்படத்திலிருந்த அமீர், விலகியபோது இனியாவையும் நீக்கினார் இயக்குனர். இதனால் நாம்தான் படத்தின் முதன்மை நாயகி என்று செம உற்சாகத்தில் நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து பாரதிராஜா காட்டுப்பகுதிகளிலேயே வெட்ட வெயிலில் படப்பிடிப்பு நடத்தி வருவதால், கோ படத்தில் அலுங்காமல் குலுங்காமல் நடித்த நான் இந்த படத்தில் இப்படி வந்து சிக்கிக்கொண்டேனே என்று புலம்புகிறாராம். அதோடு, இன்னும் அரைகிணறைத்தான் தாண்டியிருக்கிறாராம் இயக்குனர். அதனால் இவர் எப்போது என்னை விடுவிடுப்பது நான் வேறு படத்தில் நடிப்பது என்றும் அம்மா ராதாவிடம் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டிருக்கிறாராம் கார்த்திகா.
ஆனால் அவரோ, பாரதிராஜா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா? என்று பல நடிகைககள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள் என்று மகளுக்கு அட்வைஸ் செய்தபடி சாந்தப்படுத்தி வைத்திருக்கிறாராம் ராதா.ஆக, அம்மாவின் வார்த்தைக்கு கட்டுப்பாட்டு தப்பிக்க வழியில்லாமல் அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாராம் அன்னக்கொடி கார்த்திகா.
No comments:
Post a Comment