Saturday 15 September 2012

சாருலதா என்ன சொல்கிறது? காத்திருககும் மாற்றான் யூனிட்


Maatran team waiting for charulathaசொந்த கதையில் படமெடுத்தால் பிரச்னையில்லை. இப்படி ஊரான் கதையில் படமாக்கினால் இதுதான் பிரச்னை என்கிற வகையில் சாருலதா, மாற்றான் ஆகிய இரண்டு படங்களுமே ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதைகளில் தயாராகி, தற்போது ஒரே நேரத்தில் திரைக்கு வரவும் துடித்துக்கொண்டு நிற்கின்றனர். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சாயல் கதை என்பதால் யார் முன்கூட்டி படத்தை வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டது. ஆனால் அதில் இப்போது முந்திக்கொண்டு திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது ப்ரியாமணி நடித்த சாருலதா.

இந்த படம் ஜப்பானிய மொழியில் வெளியான ஒரு படத்தை தழுவிதான் எடுக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர். அதோடு மாற்றானை முந்திக்கொள்ள வேண்டும் என்று வேகவேகமாக படமாக்கி இப்போது ரிலீஸ் தேதியும் குறித்து விட்டனர். இந்த நேரத்தில், மாற்றான் யூனிட் அமைதி காத்து வருகிறது. சாருலதா போன்றே தங்களது மாற்றான் கதைக்களமும் இருந்தால், சில திருத்தங்களை செய்து படத்தை வெளியிடலாம் என்பதே இந்த அமைதியான காத்திருப்புக்கு காரணமாம்.

No comments:

Post a Comment