Saturday 15 September 2012

'தாண்டவம்' படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி





விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது இதில் உளவுத்துறை அதிகாரியாகவும், பார்வையற்றவராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, எமி நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ளார்.




அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல்கிஷ் என்ற பார்வையற்றவரின் மேனரிசங்களை கற்று விக்ரம் இதில் நடித்துள்ளார். விக்ரமும் பார்வையற்ற டேனியல்கிஷ்சும் சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-

டேனியல் கிஷ் எக்கோ லொகேஷன் முறைப்படி பொருட்களை காதால் அறியும் வித்தை கற்றுள்ளார். ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நான் நடிப்பதற்கு டேனியல் கிஷ்தான் தூண்டுதலாக இருந்தார். பார்வையற்றவர்களால் தன்னிச்சையாக செயல்பட முடியும் என்பதற்கு அவர் உதாரணம். படத்தில் அதை சொல்லி உள்ளோம்.
பார்வையில்லாத நிலையிலும் ஒவ்வொரு பொருளையும் டேனியல்கிஷ் துல்லியமாக அறிகிறார். எதிரில் போட்டோகிராபர் நிற்பதும் அவருக்கு தெரிகிறது. ‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளார். டேனியல் மூலம் இந்தியாவில் பார்வையற்றோருக்கு புது வழி பிறந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

டேனியல்கிஷ் கூறும்போது, நான் பிறந்த சில மாதங்களிலேயே இரு கண்களையும் இழந்தேன். எதிரொலியை பயன்படுத்தி காதால் பார்க்கும் வித்தையை கற்றுக்கொண்டேன். உலகம் முழுவதும் அதை பிரபலபடுத்தி வருகிறேன். ‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளேன் என்றார். இயக்குனர் விஜய், யுடிவி தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment