விஷ்ணுவர்தன் இயக்கி வரும் படத்திற்காக உடற்பயிற்சி எல்லாம் செய்து, உடம்பை மெருகேற்றி நடித்து வருகிறார் அஜீத்.
சென்னை அம்பத்தூரில் நடக்கும் படப்பிடிப்பில் ஆர்யா, நயன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தினை தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். விஜய வாஹினி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.
அஜீத் சிவாவிற்கு போன் செய்து கதையை மாற்றும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை சிவா மறுத்து இருக்கிறார்.
இப்படம் குறித்து சிவா "படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன். அஜீத் இதுவரை எனக்கு போன் எதுவும் செய்யவில்லை. அஜீத் போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்துக் கொண்டு எந்த மாதிரி கதையை வேண்டுமானாலும் செய்யலாம். இப்படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத அஜீத்தை பார்க்கலாம். அஜீத்திற்கே இந்த கேரக்டர் புதிதாக இருக்கும்.
படத்தின் நாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்யலாம் என்று இருக்கிறோம். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்து விடுவார் என்று நம்புகிறேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment