சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தர்ப்பவசத்தால் இயக்குனராகிவிட்டார். அதனால் தன் தம்பி திலீபனை நடிகராக்குவது என்று முடிவு செய்தார். தன் உதவியாளர் சரவணன் இயக்கிய எங்கேயும் எப்போதும் படத்திலேயே தம்பியை அறிமுகப்படுத்த நினைத்தார். அப்போது சரியாக அமையவில்லை. இப்போது இன்னொரு உதவியாளர் பி.கின்ஸ்லின் என்பவரை இயக்குனராக்கி தம்பியை ஹீரோவாக்கி விட்டார். படத்தின் பெயர் வத்திக்குச்சி. ஹீரோயின் அஞ்சலி.
சென்னை புறநகரிலிருந்து சென்னைக்கு வரும் மக்களின் கதை. அட்டக்கத்தி சாயலில் இன்னொரு படம். இதில் திலீபன் ஷேர் ஆட்டோ டிரைவர். அதில் தினசரி பயணம் செய்பவர் அஞ்சலி, இருவருக்கும் காதல் அரும்புகிறது. அதில் பயணம் செய்கிற இன்னொருவருக்கும் அஞ்சலி மீது காதல். வழக்கம்போல திமிரான பொண்ணு அஞ்சலி. அவர் யாருடன் லவ்ஸ் பண்ணுகிறார் என்பது கதை. அண்ணன் ஜெயிச்ச மாதிரி தம்புயும் ஜெயிப்பாரான்னு பொருத்திருந்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment