Friday 7 September 2012

வந்தார்யா ஆர்யா!

'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பி இருப்பது பல்வேறு தயாரிப்பாளர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது ஆர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினார்கள். அதற்கு பிறகு ஆர்யா 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று விட்டார்.

தற்போது ஆர்யா திரும்பி இருப்பதால், சென்னையில் அஜீத் - ஆர்யா சம்பந்தப்பட்ட இதர காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். அதுமட்டுமன்றி ஆர்யா - டாப்ஸி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

சென்னையில் தொடங்க இருக்கும் படப்பிடிப்பில் அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி இவர்களது மொத்த காட்சிகளையும் முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இப்படத்தின் பெயர் 'ஜெய்தேவ்', 'சுராங்கனி' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் போஸ்டர்கள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லையாம்.

விரைவில் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கான போட்டோ ஷுட் விரைவில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தின் ஹைலைட் அஜீத் - ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் என்கிறது படக்குழு.

No comments:

Post a Comment