Thursday 29 November 2012

மீண்டும் சிம்பு + கௌதம் மேனன் !


சிம்பு நடித்த படங்களில் பெஸ்ட் என்றவுடன் பலரும் முதலில் கூறும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அப்படம். சிம்பு, த்ரிஷா நடித்த அப்படத்தினை இயக்கியிருந்தார் கெளதம் மேனன்.

'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வரும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தினை இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், சூர்யா 'சிங்கம் 2' படத்தினை முடித்து விட்டு லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். இதனால் கெளதம் மேனன் அடுத்து இயக்கும் படம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் சிம்பு, கெளதம் மேனன் இருவருமே சமீபத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' போன்ற இன்னொரு காதல் கதை வேண்டாம் என்று முடிவு செய்துள்ள கெளதம் மேனன், சிம்புவுக்கு ஏற்றவாறு ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து இருக்கிறாராம்.

No comments:

Post a Comment