விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புன்னகை இளவரசியாக ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை சினேகா, சமீபத்தில் அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார், அவர் பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் வெளி வர உள்ள படம் ஹரிதாஸ், இந்த படம் குறித்தும் தினமலருக்கு சினேகா அளித்த பேட்டியில்,
நான் சினிமாவில் கிட்டத்தட்ட 69 படங்களில் நடித்துள்ளேன் , ஆனால் ஹரிதாஸ் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம், என் படங்களில் எப்போதும் கிளாமர் இருக்காது, ரொம்ப எதார்த்தமான குடும்ப பாங்கான படங்கள் தான் நடித்துள்ளேன், அந்த வகையில் என் கேரக்டருக்கு பொருத்தமான ரொம்ப எதார்த்தமான படம் ஹரிதாஸ், படத்தில் டீச்சர் ரோல், அந்த சிறு வயது குழந்தையுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், இந்த படத்தில் நான் ஹீரோயின் அல்ல, கதை தான் எல்லாமே. நான் எப்போதும் என் படங்களுக்கு ஹோம் வொர்க் செய்து பார்க்கும் பழக்கம் இல்லை, இயக்குனர் ஸ்பாட்டில் என்ன சொல்கிறாரோ அதை புரிந்து கொண்டு அப்படியே வெளிப்படுத்துவேன், ஒன்னும் மைண்ட்ல வச்சிக்காம டைரக்டர் சொல்றதை கேட்டு செய்தாலே போதும்னு நினைப்பேன் , அதுவே நாம் நினைப்பதை அழகாக வெளிக்காட்ட முடியும், இந்த படமும் அப்படி தான் நடித்துள்ளேன்.
நான் நடித்த எத்தனையோ படங்களில் சில படங்கள் மனசை விட்டு அகலாது, விரும்புகிறேன், ஆட்டோகிராப், வசூல்ராஜா, பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, இப்படி எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் ஹரிதாஸ் படம் நிச்சயமாக இருக்கும். பொதுவா சினிமா ஹீரோயின்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனா அவங்க திரும்ப நடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்றாங்க. அண்ணி அக்கா இது மாறி ரோல்ஸ் பண்ண வச்சிடறாங்க, என்னை பொறுத்த வரை எந்த கதா பாத்திரம் சினேகா நடித்தா நல்லா
இருக்கும்னு டைரக்டர் முடிவு பண்ணி கேட்கிறார்களோ நிச்சயம் அந்த ரோலை நான் மிஸ் பண்ண மாட்டேன்,
கல்யாணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 கதை கேட்டிருக்கிறேன் அதில் ஒன்று மட்டும் ஒத்துகிட்டேன், எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் , அதன் பிறகு தான் மற்றவை, நான் இது வரை செய்த படங்கள் எனக்கு கெட்ட பெயரை தந்ததில்லை, இனிமேலும் அதை காப்பாற்றுவேன், மீடியாக்களில் நானும் பிரசன்னாவும் நிறைய பேசிட்டோம், அதனால் தான் இந்த தீபாவளிக்கு கூட யாருக்கும் பேட்டி ,பார்ட்டி என்று எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டோம் ,அப்பா அம்மா அக்கா அண்ணன் என்று கிட்டத்தட்ட 25 பேர் உள்ள எங்கள் குடும்பத்துடன் இந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு நானும் பிரசன்னாவும் கொண்டாடினோம் , தற்போது பிரசன்னா சென்னையில் ஒரு நாள் மற்றும் பிரியாணி படத்திலும் ஒரு தெலுகு படத்திலும் நடித்து வருகிறார்
என் எதிர் காலத்தை பற்றி நிறைய கனவு இருக்கு, நிறைய திட்டம் இருக்கு, எனக்கு காஸ்ட்யூம் டிசைன் ஆர்வம் இருக்கு, இன்டிரியர் வேலையும் ஆர்வம் உண்டு, நிச்சயம் விரைவில் சினிமாவில் இருந்து கொண்டு அதன் தொடர்பான சில வேளைகளில் ஈடுபட விரும்புகிறேன், விரைவில் அறிவிப்பேன். படம் எனக்கு வந்தாலும் வரலைனாலும் யாரையும் போய் வற்புறுத்த மாட்டேன், எனக்கு வரும் ரோல் நிச்சயம் எனக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கு, என்ன இருந்தாலும் நான் எப்போதும் சினிமாவில் இருக்கவே ஆசைப் படுறேன் என்று சொல்லி முடித்தார் சினேகா.
No comments:
Post a Comment