Thursday 29 November 2012

படங்களை அடுக்கும் ஸ்டூடியோ க்ரீன் !


தமிழ் திரையுலகில் 2013ல் அதிக படங்களை வெளியிடும் நிறுவனமாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இருக்கும். இந்நிறுவனத்தினை நடத்தி வருகிறார் ஞானவேல்.

பல்வேறு படங்களை தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், மற்ற நிறுவனங்களின் படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது.

அந்நிறுவனம் வெளியிட மற்றும் தயாரித்து வரும் படங்களின் விவரம் :

'கும்கி' : பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து இருக்கும் 'கும்கி' படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' தயாரித்து இருக்கிறது. அப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி, டிசம்பர் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்சார் செய்ய இருக்கிறார்கள்.

அலெக்ஸ் பாண்டியன் : சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்து இருக்கும் படம் 'அலெக்ஸ் பாண்டியன்'. இப்படத்தினை 2013 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாள் அன்று இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா : பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் நடித்து இருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கி விட்டது ஸ்டூடியோ க்ரீன். 2013 பிப்ரவரியில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிங்கம் 2 : ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்து வரும் 'சிங்கம் 2' படத்தை 2013 கோடை விடுமுறைக்கு வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தினை டிசம்பரில் இருந்தே விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரியாணி : வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வரும் 'பிரியாணி' படப்பிடிப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது. இன்னும் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படவில்லை.

அழகுராஜா ஆல் இன் ஆல் : ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் நடிக்க இருக்கும் படம் இது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'அட்டகத்தி' ரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஆனால் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

No comments:

Post a Comment